Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம்-நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் முத்தையா. இவரின் மனைவி அன்னலட்சுமி. இவர்களது மகள் கார்த்திகா. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். மகள் கார்த்திகாவுடன் தனியே வசித்து வருகிறார் அன்னலட்சுமி.

குடும்பச் செலவுக்கு முத்தையா பணம் கொடுக்காமல் இருந்தார். இதனால் அன்னலட்சுமி கஷ்டபட்டு வந்தார். தூத்துக்குடி முதலாம் நடுவர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2007ல் அன்னலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏமந்த்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி தனது உத்தரவில், பாதிக்கப்பட்ட அன்னலட்சுமிக்கு மாதந்தோறும் ரூ.3,500ஐ ஜீவனாம்சமாக அவரது கணவர் முத்தையா வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

குற்றவியல் நடைமுறைச் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடரப்படுவதுதான் நடைமுறையில் உள்ளது. இதில் கால விரையமும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் உரிய காலத்தில் இழப்பீடும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முதலாக இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கும் விரைவில் முடிந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+