அந்தமான் நில நடுக்க எதிரொலி - சென்னையில் 'ஆஃப்டர் ஷாக்'
சென்னை: அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சென்னையிலும் நேற்று சில பகுதிகளில் லேசான நில அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நில அதிர்ச்சி பெரிய அளவில் இல்லை.
அந்தமான் தீவுகளில் நேற்று பிற்பகலும், மதியமும் இரு முறை நில நடுக்கங்கள் ஏற்பட்டன. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அந்தமான் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம், சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான நில அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது. மிகப் பெரிய கட்டடங்களில் இருந்தவர்கள் மட்டுமே இது உணரப்பட்டுள்ளது. மேலும் இது பெரிய அளவிலும் இல்லை.
சாந்தோம், திருவான்மியூர், பெசன்ட் நகர் பகுதிகளில் மட்டுமே இந்த நில அதிர்ச்சி தெரிந்துள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஏற்பட்டது நில நடுக்கம் அல்ல என்றும் அது ஆஃப்டர் ஷாக் என்றும் வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications