தீவிரவாதிகளின் போனில் பாளை. முக்கிய பிரமுகரின் எண்!
நெல்லை: நெல்லை தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில், பாளையங்கோட்டையச் சேர்ந்த முக்கியப் பிரமுகரின் எண் இருப்பதாக கூறப்படுகிறது.
சுதந்திர தினத்தின் போது குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதாக நெல்லை பேட்டையை சேர்ந்த சேக் அப்துல் கபூர், ஹீரா, புழல் சிறையிலிருந்த அலி அப்துல்லா ஆதியோரை போலீசார் கைது செய்தனர்.
ஹீரா, கபூர் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 செல்போன்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த செல்போன்களில் தீவிரவாதி தவ்பீக் மற்றும் ஒரு பெண்ணின் செல்போன் நம்பர் உள்ளிட்ட பல்வேறு எண்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் மற்றொரு அமைப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் நம்பர்களும் இதில் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக பாளையை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரின் நம்பரும் பதிவாகி உள்ளது. இது தவிர கேரளாவை சேர்ந்த வேறு சில அமைப்பின் தலைவர்களின் நம்பர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இவர்கள் தீவிரவாதிகளுக்கு தேவையான பண உதவிகளை செய்திருக்கலாம் என தெரிகிறது.
இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தினால் தலைமறைவாக உள்ள தீவிரவாதி தவ்பீக் குறித்து தகவல்கள் தெரிய வரும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
செல்போன் வாங்கிய வடமாநில மர்ம நபர்கள்:
இதற்கிடையே, தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு செல்போன் கடையில் காலை வந்த வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் தங்களுக்கு புதிய செல்போன் வேண்டும் என்று கேட்டனர்.
அவர்களது நடவடிக்கையில் கடைகாரருககு சந்தேகம் வந்தது. இதுகுறித்து போலீசில் தெரிவிக்க முடிவு செய்த கடைக்காரர் அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நபர்கள் சிக்கிரம் செல்போன் தரும்படி நச்சரித்து ரூ.3000 மதிப்புள்ள செல்போனை வாங்கிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து கடைக்காரர் எஸ்பி ஆபிசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வருவதற்குள் அந்த நபர்கள் மாயமாகி விட்டனர்.
செல்போன் வாங்கி சென்ற நபர்கள் தீவிரவாதிகளா அல்லது கடையை நோட்டமிட வந்த செல்போன் கொள்ளையர்களா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications