மணப்பாறை: வெடிபொருட்கள்-டெட்டனேட்டர்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உரிமம் பெறாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ வெடிபொருட்ள், 28 டெட்டனேட்டர்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மணப்பாறை அருகே உள்ள பாப்பாபட்டி என்கிற கிராமத்தைச் சேர்ந்த தனராஜ் என்பவர் இந்த வெடிபொருட்களை தனது பண்ணை இல்லத்தில் பதுக்கி வைத்திருந்தார்.
இவற்றுக்கு எந்தவித உரிமத்தையும் அவர் பெற்றிருக்கவில்லை. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸார் சோதனை நடத்தி அவற்றைப் பறிமுதல் செய்து தனராஜையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications