பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: பலி 13ஆக உயர்வு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் விமான படைக்கு சொந்தமான பேருந்தில் இருந்த பயணிகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாண தலைநகரான பெஷாவரில் விமானப் படைக்குச் சொந்தமான பேருந்து புறப்பட்டது. அங்குள்ள பாலத்தைக் கடந்தபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து காரில் இருந்து திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் பஸ்சில் இருந்த விமானப் படை ஊழியர்கள் 4 பேர், சாலையில் சென்றவர்கள் மற்றும் 4 வயது குழந்தை உள்பட 12 பேர் பரிதாபமாக உயரிழிந்ததாக தகவல் வெளியானது. தற்போது பலி எண்ணிக்கை 13ஆக உயர்நதுள்ளது.
இந்த தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
--------












Click it and Unblock the Notifications