மகா மோசமான ரேங்கிங்கில் சச்சின்-23வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சச்சின் டெண்டுல்கருக்கு 23வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சச்சின் போனதில்ைல என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைக்க சச்சினுக்கு 171 ரன்களே தேவைப்பட்டது. இதை இலங்கை டெஸ்ட் தொடரில் சாதித்து விடுவார் என எல்லோருமே எதிர்பார்த்தனர். ஆனால் இலங்கை தொடரில் மொத்தமே 95 ரன்களை மட்டுமே எடுத்து
சாதனையை தவற விட்டார் சச்சின்.
இலங்கை தொடருக்குப் போனபோது அவர் 13வது ரேங்க்கில் இருந்தார். ஆனால் இலங்கை தொடரில் மோசமாக விளையாடியதால் 23வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
1992ம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு மோசமான ரேங்குக்கு சச்சின் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
முதல் பத்து இடங்களில் கடைசியாக 2002ம் ஆண்டுதான் இருந்தார் சச்சின். அதற்குப் பிறகு அவருக்கு இறங்குமுகம்தான். கடந்த 6 ஆண்டுகளில் அவர் ஒருமுறை கூடமுதல் பத்து இடங்களுக்குள் வரவே இல்ைல.
ஆனால் வீரேந்திர ஷேவாக்குக்கு சந்தோஷமான செய்தி கிடைத்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மார்ச்சுக்குப் பின்னர் அவர் முதல் முறையாக முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளார். தற்போதைய நிலவரப்படி முதல் பத்து இடங்களுக்குள் உள்ள ஒரே இந்திய வீரர் ஷேவாக் மட்டுமே.
இலங்கை டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி 344 ரன்களைக் குவித்த ஷேவாக் டெஸ்ட் தர வரிசையில், 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவருக்கு அடுத்துள்ள வீரர் வி.வி.எஸ்.லட்சுமண். இவர் 15வது இடத்தில் இருக்கிறார்.
முன்னாள் கேப்டன் ராகுல்டிராவிட் 16வது இடத்தில் இருக்கிறார். தர வரிசையில் இரு இடங்கள் முன்னேறியுள்ளார் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சினை விட மோசமான நிலையில் இருப்பவர் கங்குலி. அவர் 25வது ரேங்க்கில் உள்ளார். இதற்கு முன்பு 26வது இடத்தில் இருந்தார். அந்த வகையில் கங்குலி பரவாயில்லை.
பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் ஆகியோர் தலா ஒரு ரேங்க் குறைந்து, முறையே 10, 12, 18வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வழக்கம் போல முத்தையா முரளீதரன்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அஜந்தா மெண்டிஸ், முதல் 30 இடங்களுக்குள் முதல் முறையாக முன்னேறியுள்ளார்.












Click it and Unblock the Notifications