கருக்கலைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகேதாவுக்கு அபார்ஷன்!

ஆகஸ்ட் 12ம் தேதி அவருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டு விட்டதாக அவருடைய கணவர் ஹரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
25 வார கர்ப்பிணியான நிகேதா, தனது வயிற்றில் உள்ளகுழந்தைக்கு இருதய கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், குழந்தை பிறந்தால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதைப் பார்த்து எங்களால் கஷ்டப்பட முடியாது.
கருக்கலைப்பு சட்டப்படி 20 வாரங்களுக்குட்பட்ட கருவைக் கலைக்கவே சட்டத்தில் இடம் உள்ளது. எனவே எனக்கு விதி விலக்கு அளித்து கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், கருக்கலைப்புக்கு அனுமதி தரமறுத்து விட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 12ம் தேதி இரவு நிகேதாவுக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அபார்ஷன் ஆகி விட்டதாம்.
இதுகுறித்து தெரிவித்த ஹரேஷ் மேத்தா, நீதிமன்றம் எங்களுக்கு உதவ மறுத்து விட்டாலும், கடவுள் எங்கள் பக்கம் இருந்துள்ளார். இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
மீடியாக்கள் தேவையே இல்லாமல் எனது மனைவி விவகாரத்தை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டு விட்டன. இதனால் அவருக்கு மன அழுத்தமும், ரத்தக்கொதிப்பும் அதிகரித்து விட்டது. இதுவே அபார்ஷனுக்கு காரணம் என்றார்.












Click it and Unblock the Notifications