'அமர்நாத்': ஸ்ரீநகரில் இன்றும் துப்பாக்கிச் சூடு-பலி 22 ஆனது

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: அமர்நாத் நில விவகாரத்தில் காஷ்மீரில் தொடர்ந்து வன்முறையும் கலவரமும் நடந்து வருகிறது.

ஸ்ரீநகரில் இன்று காலை நடந்த கலவரத்தை அடக்க மத்திய ரிசர்வ் போலீ்ஸ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சபாகாடல் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இன்றும் ஒருவர் பலியானார். மேலும் இருவர் காயமடைந்தனர்.

அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. கோவிலுக்கு ஆதரவாக போராடி வருபவர்கள் காஷ்மீரில் உள்ள நெடுஞ்சாலைகளை தடை செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பலியாயினர்.

இதற்கிடையே நிலம் தருவதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்து வருகி்ன்றன. இவர்களைத் தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் உள்பட 6 பேர் இறந்தனர்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 13 ஆண்டுகளில் காஷ்மீ்ர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இந் நிலையில் இன்று ஸ்ரீநகர் உள்பட 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அப்போது மீண்டும் கலவரம் வெடிக்கவே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார்.

இதன்மூலம் இந்த விவகாரத்தை வைத்து நடந்த கலவரம், துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

சிஆர்பிஎப் ஐஜி இடமாற்றம்:

இந் நிலையில் காஷ்மீர் மாநில மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஐஜி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐஜி பொறுப்பு துணை ஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொடர் துப்பாக்கிச் சூடுகளையடுத்து மத்திய அரசு இன்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+