திருவாரூரில் கார் மோதி பள்ளி மாணவன் பலி
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: பள்ளிக்கு நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதியதில் 7 வயது சிறுவன் பலியானான்.
திருவாரூர் சாப்பாவூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி குமார். இவரது மகன் மதன்குமார் (7). திருவாரூர் கமலாயம் தென்கரையில் உள்ள எஸ்.எஸ். நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.
மடப்புரம் சாலையில் நண்பர்களுடன் பள்ளிக்கு நடந்து சென்றபோது ஒரு டாடா சுமோ
மதன்குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்தார்.
கார் மோதிய வேகத்தில் மதன்குமாருடன் வந்த மற்ற மாணவர்கள் 5 பேர் அருகில் உள்ள சாக்கடைக்குள் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் டிரைவர் ஓடிவிட்டார்.












Click it and Unblock the Notifications