சுதந்திர தினம்: கருணாநிதி-தலைவர்கள் வாழ்த்து
சென்னை: இந்தியாவின் 61வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து ெதரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 61வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் நாசகார சக்திகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதோடு, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், பெற்ற சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்பதை நமக்கு இந்த சுதந்திர திருநாள் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
இந்த உணர்வோடு தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜக தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தேமுதிக தலைவர் விஜய காந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications