புதுச்சேரி-நாளை இன்னொரு சுதந்திர தினம்!
புதுச்சேரி: பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்த புதுச்சேரியில் நாளை அதையொட்டி 46வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் ஒரு அங்கமான புதுச்சேரியில் இன்று நாட்டின் 62வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதேசமயம், பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரி விடுதலை பெற்று நாளையுடன் 46 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து நாளை இங்கு 46வது சுதந்திர தினத்தை புதுச்சேரி மக்கள் கொண்டாடவுள்ளனர்.
1962ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி டி ஜூரே எனப்படும் இந்தியாவுடன் புதுச்சேரி பிராந்தியம் சட்டப்பூர்வமாக இணைந்த தினமாகும். அன்றைய தினம்தான் புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பதற்கான தீர்மானத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் இயற்றியது.
நாளைய சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளை புதுச்சேரி அரசு கெளரவிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications