திருச்செந்தூர் கோவில்: ஆன்-லைன் முன்பதிவு!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் நலன் கருதி பூசை மற்றும் தங்கத் தேர் இழுத்தல் போன்றவைகளுக்கு ஆன் லைனில் முன் பதிவு செய்யும் முறை அமுல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் புகழ் பெற்ற ஸ்தலங்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலும் ஒன்று.
இந்த கோவிலில் பக்தர்களின் நலன் கருதி பூசைகளுக்கு ஆன் லைனில் முன் பதிவு செய்யும் முறை அமுல்படுத்தப்படுகிறது.
இது குறித்து கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் தேவதாச சுந்தரம் கூறியதாவது:
கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி அவர்களுக்கு தேவையான குடி நீர் வசதி, கழிப்பறை, உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்க கோவில் நிர்வாகம் முன்வந்துள்ளது.
அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவைகள் செயல்படுத்தப்படும். பக்தர்கள் தங்களது நேரத்திக்கடனை செலுத்த தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலங்களிலும் இருந்தும் வருகின்றனர்.
அவர்கள் நலன் கருதி சிறப்பு அபிஷேகம், பூசைகள், தங்கத் தேர் இழுப்பது, கோவில் தங்கும் வசதி, போன்றவற்றை ஆன் லைனில் பதிவு செய்யும் முறை உள்ளிட்ட வசதிகளை செய்ய கோவில் நிர்வாகம் சுமார் 60 நாட்களில் செய்து முடிக்கும். இதற்காக சுமார் ரூ 7.5 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார்.












Click it and Unblock the Notifications