புலிகளின் பயிற்சி தளத்தை கைப்பற்றியது ராணுவம்?
கொழும்பு: புலிகளின் முக்கிய பயிற்சி தளம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயகாரா கூறியதாவது: புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப் பகுதியில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. வெளிஓயா பகுதியில் நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 27 புலிகள் கொல்லப்பட்டனர்.
அனந்தன் குளம் என்ற இடத்தில் புலிகளின் முக்கிய பயிற்சி தளம் உள்ளது. இதை ராணுவ வீரர்கள் தீவிர போராட்டத்திற்கு பிறகு கைப்பற்றியுள்ளனர். எதிர் தாக்குதலில் ஈடுபட்ட புலிகள் சிறிது நேரத்தில் அந்த இடத்தை விட்டு தப்பியோடினர்.
இந்த பயிற்சித் தளத்தில் நூறு பதுங்கு குழிகள், நான்கு கருத்தரங்கு கூடங்கள், கிணறுகள், கழிவறைகள், கல்லறை ஆகியவை உள்ளன. அந்த கல்லறையில் 67 புலிகளின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது. வெளி ஓயா பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.
ஆனால், இந்தத் தகவல்களை புலிகள் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications