வலுக்கும் கோஷ்டிபூசல்: தங்கபாலுவை கண்டித்து சாலை மறியல்
மதுரை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை கண்டித்து வாசன் ஆதரவாளர்கள் மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆலோசனை நடத்தி வருகிறார். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரைக்கு தங்கபாலு வந்தார். அப்போது அவரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வ நாயகம், முன்னாள் எம்பி ராம்பாபு, எம்எல்ஏ ஆகியோர் வரவேற்றனர்.
ஆனால், மாநகர் மாவட்டம் சார்பில் தானப்ப முதலி மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் தங்கபாலு கலந்து கொள்ள வேண்டும் என்றும் வாசன் ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். ஆனால் அதில் கலந்து கொள்ள தங்கபாலு மறுத்து விட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த வாசன் ஆதரவாளர்கள், காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு அழகர் கோயில் ரோடு அருகே உள்ள எம்எல்ஏ ராஜேந்திரனின் தொகுதி அலுவலகத்திற்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தங்கபாலுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் மதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications