ஊனமுற்றோருக்கு சலுகைகள்-கருணாநிதி அறிவிப்பு
சென்னை: கட்டண சலுகையுடன் அரசு பஸ்களில் பயணம், கல்லூரி கட்டணம் ரத்து, தனியார் தொழிற்சாலை வேலை வாய்ப்பில் முன்னுரிமை, 2 ஆண்டுகள் கடந்த நிலையில் காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு சலுகைகளை ஊனமுற்றோருக்கு முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து, ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான 11 முக்கிய கோரிக்கைகளை அளித்தனர்.
ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து 10 கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசாணைகள் வெளியிடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இவற்றில் 3 சதவீதம் அதாவது ஏறத்தாழ 9,000பணியிடங்கள் ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களில் ஊனமுற்றோர் பணி நியமனம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் சமூக நலத்துறை அமைச்சரின் தலைமையில் செயலாளர்கள் அடங்கிய உயர்நிலை குழு கண்காணிக்கும்.
அனைத்து வகை ஊனமுற்றோரும் பாகுபடின்றி மாநிலம் முழுவதும் ரயில் கட்டணச் சலுகை பெற்றுள்ளனர். அதேபோல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்ச வரம்பின்றி பயணம் செய்ய சலுகை அளிக்கப்படும்.
பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ முன்வரும் தொழில் முனைவோருடன் ஒப்பந்தம் செய்யும்போது ஊனமுற்றோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்.
ஊனமுற்றோர் சுய வேலை வாய்ப்பு பெறும் வகையில், அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய 5 சதவிகித பங்குத் தொகையினையும் தமிழக அரசே ஏற்று மத்திய அரசின் மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று சுயவேலை வாய்ப்புகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் ஊனமுற்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.
பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போல அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் வேலை வாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
ஊனமுற்றோருக்கு வேலை வாய்ப்பு பெறும் தகுதியை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தோறும் தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையம், மூன்றாண்டு திட்டமாக அரசு நிதியுதவிடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடங்கப்படும்.
ஊனமுற்றோர் நலனுக்கான ஒரு தனி கொள்கை உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊனமுற்றோர் நெரிசலின்றி பஸ்களில் செல்ல வசதியாக அலுவலகம் முடியும் நேரத்திற்கு 15 நிமிடம் முன்னதாகவே புறப்பட்டுச் செல்லலாம் என்று நேற்று முன்தினம் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications