காஷ்மீர் நிலவரம் - அமைச்சரவையிடம் எம்.கே. நாராயணன் விளக்கம்
டெல்லி: காஷ்மீர் நிலை குறித்து ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அது தொடர்பாக மத்திய அமைச்சரவையிடம் இன்று விளக்கம் அளித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்று அங்கு சென்றார். அவருடன் பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங், மத்திய உளவுப் பிரிவின் இயக்குனர் பி.சி.ஹல்தார், இணை உளவு கமிட்டி தலைவர் உபாத்யாயா, பிரதமர் அலுவலக இணை செயலர் சஞ்சய் மிஸ்ரா, உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆகியோரும் சென்றனர்.
ஆளுநர் என்.என்.ஹோரா, உயர் போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்த நாராயணன், மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை, கலவரம் தொடர்பான சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் இந்த குழு சந்தித்தது.
இன்று டெல்லி திரும்பிய நாராயணன், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து இன்று மத்திய அமைச்சரவையிடம் விளக்கம் அளித்தார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்ைககள் குறித்தும் அவர் விவரித்தார்.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து நாராயணன் மத்திய அமைச்சரவையிடம் விளக்கியுள்ளார்.
ஆளுனர் என்.என்.வோராவை அவர் சந்தித்து பேசியுள்ளார். நெருக்கடி நிலையை சமாளிப்பது குறித்து முதல்கட்ட நடவடிக்கையாக அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே கூட்டி விவாதித்துள்ளார் என்றார்.
ஸ்ரீநகர்-முஸாபராபாத் பஸ் போக்குவரத்து தொடக்கம்:
இதற்கிடையே, அமர்நாத் நிலவரம் தொடர்பாக கடந்த 14ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீநகர்-முஸாபர்பாத் இடையிலான கேரவான் - இ -அமான் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து இன்று முதல் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. முதல் பேருந்தில் 64 பயணிகள் சென்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
சுற்றுலா போன பெண்ணை நைனிடால் காட்டுக்குள் விடிய விடிய துரத்திய டாக்ஸி டிரைவர்! ஜிபிஎஸ் காட்டிய உண்மை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ












Click it and Unblock the Notifications