முகூர்த்த நேரத்தில் வரதட்சணை: மாப்பிள்ளை, தந்தை கைது
சென்னை: முகூர்த்த நேரத்தில் கூடுதலாக வரதட்சணை கேட்டதாக மாப்பிள்ளையும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மகள் பர்வீன் (24). இவருக்கும் ஆரணியைச் சேர்ந்த சையது யூசப் (27) என்பவருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.
திருமணத்திற்காக பெண் வீட்டார் 60 பவுன் நகை, ரூ.1.25 லட்சம் பணம் மற்றும் சீர்வரிசை கொடுக்கப்பட்டதாம். இன்று எழும்பூரில் உள்ள ஒரு திருமண மஹாலில் திருமணம் நடை பெறுவதாக இருந்தது.
இந்நிலையில், மேலும் ரூ.1.25 லட்சம் பணம், மாப்பிள்ளையின் சகோதரிகளுக்கு 8 பவுன் நகையும் வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர்.
இதற்கு பெண் வீட்டார் மறுத்ததால் திருமணம் நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து மாப்பிள்ளை சையது யூசப் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications