திருச்சி மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி: திருச்சி மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் ஸ்வாமி கோவில் உள்ளது. அந்த வளாகத்திலேயே அருள்மிகு மாணிக்க விநாயகர் கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.3 கோடி செலவில் கோவில் கோபுரத்துக்கு தங்கக் கவசமும் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று மாணிக்க விநாயகர் சன்னதியின் புதிய தங்க விமானத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாணிக்க விநாயகர் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கும் புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், போக்குவரத்து அமைச்சர் நேரு, அறநிலையத் துறை சிறப்பு ஆணையர் பிச்சாண்டி, கலெக்டர் சவுண்டையா, மேயர் சாருபாலா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications