வெடிகுண்டு தயாரிப்பு-2 பேருக்கு 7 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

கரூர்: நாட்டுவெடி குண்டு தயார் செய்த வழக்கில் இருவருக்கு 7 வருட சிறை தண்டனை விதித்து குளித்தலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த கருப்பத்தூரைச் சேர்ந்தவர்கள் கோபால், ராஜா, கதிரவன், நெல்லையை சேர்ந்த சுபாஷ், தஞ்சையை சேர்ந்த புண்ணியமூர்த்தி.

இவர்கள் அனைவரும் கடந்த 2006ம் ஆண்டு கருப்பத்தூரில் முத்துவீரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நாட்டு வெடி குண்டு தயார் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்து. அதில் கோபாலும், சுபாஷூம் படுகாயம் அடைந்தனர்.

இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறி்த்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பான வழக்கு குளித்தலை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், சட்டத்திற்கு புறம்பாக வெடி குண்டு தயாரித்த கோபாலுக்கும், சுபாஷூக்கும் 7 ஆண்டு சிறை தண்டணை விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+