போலி பாஸ்போர்ட்: திருச்சியில் வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையி்ல் இருந்து நபரை பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரிணையில், அந்த நபர் பெரம்பலூர் மாவட்டம் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வாசு (36) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வாசுவை போலீஸாரிடம் சுங்க அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் வாசு சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications