பாக்: 2 தற்கொலை படை தாக்குதல்களில் 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவ குண்டு தயாரிப்பு ஆலைக்கு அருகே நடந்த இரு தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
டக்ஸிலா என்ற பகுதியில் உள்ள ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைக்குள் நுழைய முயன்ற இரு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தடுத்தனர். அப்போது அவர்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 11 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications