ஆன்லைன் வர்த்தகம்: ரூ.68 லட்சம் மோசடி, போலீஸ் வலை
திண்டுக்கல்: ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.68 லட்சம் மோசடி செய்த நபரை திண்டுக்கல் போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் ஜி.எஸ். நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் இன்டர்நெட்டில் போலி முகவரி கொடுத்து ஆன் லைனில் வர்த்தகம் செய்து வந்தார். அதற்கு மளிகை பொருட்கள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்தார்.
இந்த விளம்பரத்தை நம்பிய பெங்களூரூ சுதாகரன், ஆந்திரா குரு பிரகாஷ், புதுச்சேரி கேசவன், ஐதராபாத் நாகராஜன், விருதுநகர் சங்கர ராமகிருஷ்ணன், சேலம் சுப்பிரமணி, பிரகாஷ் ஆகிய 7 வியாபாரிகளும் பொருட்களை சப்ளை செய்தனர்.
ரூ.68 லட்சம் மதிப்புள்ள அரிசி, புளி, மஞ்சள், பாலிதின் பை சப்ளை செய்துள்ளனர். சரக்குகளை பெற்றுக்கொண்ட சீனிவாசன், ஒரு வாரத்திற்குள் பணம் தருவதாக கூறியுள்ளார்.
ஆனால் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் அவர் மீது வியாபாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர். இதையறிந்த சீனிவாசன் தலைமறைவானார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications