Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வன்முறை கட்சியாவிட்டது தேமுதிக-ராஜேந்தர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டி.ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுக் கூட்டத்தின் மீது தேமுதிகவினர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர். இதற்கு டி.ராஜேந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் டி.ஆர். கூறியதாவது:

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற லட்சிய திராவிட முன்னேற்றக்கழக பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தேன். அரசியல் என்று வந்து விட்டால் விமர்சனங்களை தாங்க வேண்டும்.

மாற்றுக் கட்சியினர் சொல்லும் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும். உங்களை நான் விமர்சிக்கிறேன் என்றால், என்னையும் விமர்சித்து விட்டு போங்கள். அதை விட்டு வன்முறைக்கு வழிவகுக்க கூடாது.

கருத்தோடு கருத்தை மோத விடுங்கள். அதை விட்டு விட்டு வன்முறை செயல்களில் இறங்க கூடாது.

தேமுதிகவினர் முன்பு நெல்லையிலும், திருப்பூரிலும் என் பேனரை கிழித்தார்கள். நான் பொறுத்துக்கொண்டேன். அரியலூரில் புகுந்து மின்விளக்குகளை உடைத்தார்கள். அதையும் நான் சகித்துக் கொண்டேன். இப்போது அண்ணா பிறந்த மண்ணில், என்னுடைய கட்சி பொதுக்கூட்டத்தில் தேமுதிகவினர் பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறார்கள். கடவுள் அருளால் நான் பிழைத்துக்கொண்டேன்.

இதற்காக நான் பாதுகாப்பு கேட்க போவதில்லை. வழக்கும் தொடர போவதில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தேமுதிக தொண்டரை மட்டும் தான் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மற்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்.

தேமுதிக வன்முறை கட்சியாகி விட்டது. இந்த சம்பவம் பற்றி விஜயகாந்த் இதுவரையில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை ஏன்?. இது போன்ற சம்பவம் மேலும் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? அவர் கட்சியினருக்கு தெரிந்தது எல்லாம் தீவிரவாதம் தான்.

வெடிகுண்டு வீசிப்பார்ப்பதால், நான் கூட்டத்தில் பேசுவதை குறைத்துக் கொள்ளப் போவதில்லை. சலசலப்புக்கு நான் அஞ்சப்போவதில்லை. இப்பொழுது ஒலிப்பதை விட இன்னும் என் குரல் அதிகமாக ஒலிக்கும்.

ராமேஸ்வரத்தில் நின்று கொண்டு வார்த்தைகளில் நிதானம் இல்லாமல் திமுகவினரை சுட வேண்டாமா? என்று பேசியிருக்கிறார். பின்பு அதை மறுத்து இருக்கிறார். இதை ஒரு வார இதழ் ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறது. அதை சுட்டிக்காட்டி தான் நான் பேசினேன். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பற்றி அவர் தகாதவார்த்தையால் கேள்வி கேட்கிறார்.

மற்றவரை விமர்சனம் செய்வது அவருடைய உரிமை என்றால், இவரை விமர்சனம் செய்ய மற்றவர்களுக்கு உரிமை இல்லையா?

ஒரேயொரு சட்டமன்ற தொகுதியில் மட்டும் தேமுதிக ஜெயித்து இருக்கும் நிலையில், இப்போதே இந்தளவுக்கு வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால், நாளை.. நிச்சயம் அரசியலில் வரமாட்டார்கள்... ஒருவேளை வந்து விட்டால் நாடு தாங்குமா? என்றார் டி.ராஜேந்தர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+