அரசியலில் நிதானமாக அடியெடுத்து வைப்பேன்: சிரஞ்சீவி
ஹைதராபாத்: அரசியலில் மிக மிக நிதானமாக நடந்து கொள்வேன். எந்தத் தவறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று மெகா ஸ்டார் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள சிரஞ்சீவி தனது திரையுலக நண்பர்களுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு அடியையும் நான் கவனமாக எடுத்து வைப்பேன். எனது நடவடிக்கைகளில் எந்தத் தவறும் வராமல் பார்த்துக் கொள்வேன்.
என்னால் திரையுலகம் பெருமைப்படும் வகையில் நடந்து கொள்வேன். எனக்கு இத்தனை காலம் ஒத்துழைப்பு வழங்கிய திரையுலக நண்பர்களுக்கு எனது நன்றிகள். எனது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
ஒரே நேரத்தில் இரு படகுகளில் சவாரி செய்ய நான் விரும்பவில்லை. திரையுலகுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எனது மனம் இன்னும் கல்லாக மறுக்கிறது என்றார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவி அளித்த இந்த விருந்தில் மோகன் பாபு, நாகார்ஜூன், பவன்கல்யாண், நாக பாபு, அல்லு அஏரவிந்த், அல்லு அர்ஜூன், ராம் சரம் தேஜ், ரவி தேஜா, ஸ்ரீகாந்த், பிரம்மானந்தம், அஸ்வினி தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
30 வருட கால திரையுலக வாழ்க்கையில், 148 படங்களில் சிரஞ்சீவி நடித்துள்ளார். 3 இந்திப் படங்கள், 2 கன்னடப் படங்கள், ராணுவ வீரன், 47 நாட்கள் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications