தொடரும் பதட்டம் காஷ்மீரில் காலவரையற்ற ஊரடங்கு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் பல முக்கியப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று பல்வேறு அமைப்புகள் ஸ்ரீநகரில் பேரணிகள் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து வன்முறை மூளலாம் என்று அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கிய பகுதிகளிலும் காலவரையற்ற ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.
பேரணிகளின்போது சில முக்கிய தலைவர்கள் தாக்கப்படலாம் என்று உளவுப் பிரிவு தகவல் எச்சரித்ததன் காரணமாகவும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications