திமுக - இடதுசாரி கூட்டணி நீடிக்க திருமாவளவன் விருப்பம்
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தலித்துகள் மீது பொய் வழக்குகள் போடுவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் நெல்லையில் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறுகையில், தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க இடதுசாரிகள் முயற்சிக்கின்றனர். தேசிய அளவில் எடுத்த நிலையை தமிழகத்திலும் பின்பற்ற முயற்சிக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இப்போது இருப்பதுபோல் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர வேண்டும். அப்போதுதான் மதவாத சமூக விரோத சக்திகளை முறியடிக்க முடியும். இந்திய அளவில் எந்தவித நிலைப்பாடு இருந்தாலும் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடதுசாரிகள் நீடிக்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்த வரை முஸ்லீம்கள் சட்ட விரோத சமூகவிரோத மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதில்லை. அவர்கள் அமைதியாக வாழ்கின்றனர்.
நெல்லையில் அப்துல்கபூர், ஹீரா போன்ற முஸ்லீம் இளைஞர்களை கைது செய்ததை கண்டிக்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications