சதுரகிரி மலையில் மூலிகை திட்டம்-எம்.பி யோசனை
மதுரை: சதுரகிரி மலையில் அரியவகை மூலிகைகள் அதிகம் இருப்பதாகவும், அங்கு மூலிகை சார்ந்த திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பலாம் என்று காங்கிரஸ் எம்பி சித்தன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் விழிப்பு கண்காணிப்பு குழுக் கூட்டம், எம்.பி. மோகன் தலைமையிலும், மாவட்ட கலெக்டர் ஜவஹர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட காங்கிரஸ் எம்.பி. சித்தன் பேசியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்திக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்திற்கு கணிசமாக நிதி கிடைக்கிறது. மதுரை மாவட்டம், சதுரகிரி மலையில் சித்த அரியவகை மருத்துவ மூலிகைகள் அதிகம் உள்ளன. எனவே இங்கு மூலிகை சார்ந்த திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
மதுரை திருமங்கலத்தில் தமிழக அரசு சார்பில் தியாகி விஸ்வநாத தாஸ் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இது நினைவிடம் என்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு பயன்படுத்த முடியவில்லை. மேலும் அதை சீர்படுத்தி நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம். அல்லது அங்கு அறிவு வளர்க்கும் பொது நூலகம் அமைக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications