தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்
சென்னை: வேலைக்குப் போகாததை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்து தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தமிழ்ச் செல்வன் (30), மணிகண்டன் (25), விஜி (21). சென்னை அடுத்த மணலி புது நகர் வெள்ளிவாயல் என்ற இடத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்களில் மணிகண்டன் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதை அவரது தம்பி விஜி கண்டித்து வந்தார். இதனால் சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று அவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் காய்கறி நறுக்கும் கத்தியால் விஜியின் இடது புற மார்பில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் விஜி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடினார்.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் விஜியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் விஜி வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை தேடி வருகிறார்கள். மூத்த சகோதரர் தமிழ்ச்செல்வனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications