இந்திய ஆடிட்டர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் கிராக்கி!

Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அரசின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்ய இந்தியாவிலிருந்து 100 ஆடிட்டர்கள் கேப்டவுன் செல்கிறார்கள்.

தென்னாப்பிரிக்க உள்ளாட்சி அமைப்புகளின் பண விவகாரங்கள் மற்றும் இதர கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. ஆனால் இதற்குத் தேவையான அளவு அந்நாட்டில் ஆடிட்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை.

எனவே இந்த வேலைகளில் தென்னாப்ரிக்க ஆடிட்டர் ஜெனரலுக்கு உதவ 100 இந்திய ஆடிட்டர்களைத் தேர்வு செய்துள்ளனர்.

இவர்களில் முதல்கட்டமாக 20 ஆடிட்டர்கள் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா செல்கிறார்கள்.

மீதமுள்ள 80 ஆடிட்டர்கள் அடுத்தடுத்த குழுவில் பயணிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அடுத்த 3 ஆண்டுகள் வரை தென்னாப்பிரிக்காவலில் தங்கியிருந்து அங்0குள்ள பல்வேறு அரசு நிதி அமைப்புகளின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்வார்கள். தேவைப்பட்டால், இந்த அமைப்புகளின் கணக்கு அமைப்புகளை மறு சீரமைப்பு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியர்களுக்கு இவ்வளவு தேவை ஏற்பட்டுள்ளதன் காரணம், அங்குள்ள ஆடிட்டர்கள் அரசு வேலைக்கு வர மறுத்து தனியார் நிறுவனங்களுக்குத் தாவி விடுவதுதானாம்.

இந்த நிலை ஆபத்தானது. ஆனாலும் வேறு வழியில்லை எங்களுக்கு எனத் தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க ஆடிட்டர் ஜெனரல் நொம்பம்பே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+