நாளை சிபு சோரன் முதல்வராக பதவியேற்பு
ராஞ்சி: ஜார்கண்டில் ஆட்சி அமைக்க சிபு சோனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில ஆளுநர். இதையடுத்து நாளை அவர் முதல்வராகப் பதவியேற்கிறார்.
வரும் 1ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவு கரம் நீட்டிய ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாக் கட்சி தலைவர் சிபு சோரன், பிரதி உபகாரமாக ஜார்கண்டில் முதல்வர் பதவியை கோரினார். இதையடுத்து அம்மாநில முதல்வர் மதுகோடாவை விலகிக் கொள்ளும்படி காங்கிரஸ் கேட்டுக் கொண்டது.
இதற்கு மறுத்த மதுகோடாவை எதிர்த்து, அவருக்கு அளித்த வந்த ஆதரவை, 17 எம்எல்ஏக்களை கொண்ட சிபுசோரன் கட்சி திரும்ப பெற்றது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்த சுயேச்சை எம்எல்ஏ மதுகோடா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் களம் இறங்கினார் சோரன். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், சோரனுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்று கூறிவந்த மதுகோடாவை நேற்று சம்மதிக்க வைத்தார்.
மதுகோடாவைத் தொடர்ந்து, சுயேச்சை எம்எல்ஏவும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டீபன் மராண்டியும், சோரனுக்கு ஆதரவளிப்பதாக நேற்று தெரிவித்தார். ஆதரவு கடிதங்களை இருவரும் சோரனிடம் உடனே ஒப்படைத்தனர்.
இதையடுத்து தன்னை ஆதரிக்கும் 42 எம்எல்ஏக்களின் பட்டியலுடன் அம்மாநில ஆளுநர் சையது சிப்தே ரசியை நேற்று மாலை சந்தித்தார் சோரன். பட்டியலை ஒப்படைத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து, சிபு சோரனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். பெரும்பான்மையை வரும் ஒன்றாம் தேதி நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார்.
இதன் மூலம் 82 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபையில் பெரும்பான்மையை பெற்றுள்ள சோரன் நாளை முதல்வராக பதவியேற்கிறார்.
சோரன் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள மதுகோடாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஜார்கண்டில் முதல்வராக பதவியேற்ற சிபு சோரன், சட்டசபையில் பெரும்பான்யை நிரூபிக்க முடியாததால் பதவியேற்ற 9 நாளில் ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளில் இரண்டு முறை ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications