மாணவிக்கு காதல் கடிதம்-ஆசிரியருக்கு உதை
ஈரோடு: பவானியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியருக்கு அடி உதை விழுந்தது.
ஈரோடு மாவட்டம், பவானி அரசு பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் திம்மராயன் (32). இதே பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருபவர் ஜானகி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). திம்மராயன் வகுப்பில் ஜானிகி படித்து வருகிறார்.
இந்நிலையில் மாணவி ஜானகி மீது ஆசிரியர் திம்மராயனுக்கு காதல் பிறந்தது. ஜானகியை அடிக்கடி அழைத்து பேசி வந்துள்ளார். இது, சக மாணவிகள் மூலம் ஜானகியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து ஜானகிக்கு மாப்பிள்ளை பார்த்து அவரது பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்தனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் திம்மராயன் மாணவி ஜானகிக்கு வேறு சில மாணவிகள் மூலம் காதல் கடிதம் கொடுத்து அனுப்பியுள்ளார். செல்போன் மூலமும் ஜானகியிடம் பேசினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜானகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியர் திம்மராயனை அடித்து உதைத்தனர். இதனால் ஆசிரியர் திம்மராயன் நீண்ட விடுப்பில் தனது சொந்த ஊரான மேச்சேரிக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து பவானி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications