ஒரிஸ்ஸா வன்முறை: 29ம் தேதி கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பந்த்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரிசாவில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராக நடந்த வன்முறையைக் கண்டித்து வருகிற 29ம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் தங்களது நிறுவனங்களை மூடி பந்த் நடத்த கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

ஒரிசாவில் வி.எச்.பி. தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக விஎச்பி, பஜ்ரங்தளம் ஆகியவற்றைச் ேசர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கினர். சர்ச்சுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஒரு கன்னியாஸ்திரி உள்பட இருவர் கொல்லப்பட்டனர். பாதிரியார் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவிக்கவும், ஒரிசாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வருகிற 29ம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை மூடி பந்த் நடத்த இந்திய கத்தோலிக்க பிஷப்கள் சபை தீர்மானித்துள்ளது.

அன்றைய தினம் நாடு முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து அமைதிப் பேரணிகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+