சூரத்தில் வெடிகுண்டுகள்- இருவர் கைது
Subscribe to Oneindia Tamil

கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி அகமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
குஜராத் மாநிலத்தின் முக்கிய வர்த்தக நகரமான டைமண்ட் சிட்டி என்று அழைக்கப்படும் சூரத்தில் 25 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி சூரத்தைச் சேர்ந்த தன்வீர் பதான், சாகித் மன்சூரி ஆகிய இருவரை இன்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications