அடுத்த மாதம் சிரஞ்சீவி ரத யாத்திரை!
பள்ளிப்பட்டு: தனது கட்சியை மக்களிடம் கொண்டு செல்வது, அவர்களின் ஆதரவை திரட்டும் வேலைகளை சிரஞ்சீவி படுவேகமாக தொடங்கியுள்ளார். அதன் முதல் கட்டமாக ஆந்திரா முழுவதும் அடுத்த மாதம் ரத யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
திருப்பதியில் பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கிய சிரஞ்சீவி, குற்றப் பின்னணி இல்லாத பிற கட்சித் தலைவர்களுக்கு வலை வீச ஆரம்பித்துள்ளார்.
திட்டமிட்டுள்ளார்.
தனது அரசியல் ஆலோசகர் டாக்டர் மித்ரா, மைத்துனர் அல்லுஅரவிந்த், சகோதரர்கள் பவன் கல்யாண், நாகேந்திர பாபு, ஹரி ராமஜோகையா ஆகியோருடன் கட்சி நிர்வாகிகள் நியமிப்பது குறித்து சிரஞ்சீவி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக ஆந்திரா முழுவதும் ரத யாத்திரை செல்லவும் திட்டமிட்டுள்ளார் சிரஞ்சீவி. அடுத்த மாதம் யாத்திரையை அவர் தொடங்குகிறார்.
யாத்திரைக்கான ஏற்பாடுகளை டாக்டர் மித்ரா செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications