For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெர்மிட்: கேரளா எல்லையில் தவம் கிடந்த யானைகள்

By Staff
Google Oneindia Tamil News

Elephant
செங்கோட்டை: முறையான அனுமதி இல்லாததால் கேரளாவுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட இருந்த சர்க்கஸ் யானைகள், கேரள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டன. 24 மணி நேரத்திற்கும் மேலாக லாரிகளிலேயே நின்றபடி அவதியடைந்த யானைகள் பெர்மிட் கிடைத்த பின்னர் அனுமதிக்கப்பட்டன.

செங்கோட்டை வழியாக கேரள மாநிலம் கொல்லத்திற்கு 5 சர்க்கஸ் யானைகளை ஏற்றிக் கொண்டு 3 லாரிகள் புறப்பட்டன. தமிழக எல்லையில் உள்ள புளியரை செக்போஸ்டில் அந்த லாரிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கேரளாவில் உள்ள கோட்டைவாசல் செக்போஸ்டை அடைந்தபோது முறையான அனுமதி இல்லாததால் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து சர்க்கஸ் நிர்வாகிகள் பெர்மிட் வாங்க சென்றுவிட்டனர். இதனால் ஐந்து யானைகளும் ஒரு நாள் முழுவதும் லாரிகளிலேயே நின்று கொண்டிருந்ததால் அவை கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின. அதற்கு தேவையான தீணியும் போடப்படாததால் பட்டினியால் வாடின.

பின்னர் மாலையில் அங்கு வந்த சர்க்கஸ் நிர்வாகிகள் பெர்மிட்டை செக்போஸ்டில் இருந்த வனத்துறையினரிடம் காண்பித்தனர். இதையடு்தது யானைகளுடன் கேரளாவிற்குள் செல்ல லாரிகள் அனுமதிக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X