கூட்டுறவு வங்கியில் ரூ. 4 லட்சம் கையாடல்!
நெல்லை: வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.4 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது இது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணத்தை டெபசிட் செய்துள்ளனர்.
2 மாதங்களுக்கு முன் ஒரு சில வாடிக்கையாளர்கள் முதிர்வு தொகையை கேட்டு வங்கியை அணுகிய போது பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் நெல்லை மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளரிடம் புகார் செய்தனர். இதையடுத்து துணை பதிவாளர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் செவல்குளம் வங்கியில் கணக்குகளை தணிக்கை செய்தனர்.
அப்போது கடந்த 2001 முதல் 2003ம் ஆண்டு வரை வங்கியில் பொதுமக்களின் வைப்புத் தொகை ரூ. 4 லட்சத்து ரூ.17,751 கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுகுமார் மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி சிவமுருகையா, ஆரோக்கியசாமி ஆகிய ஊழியர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications