For Quick Alerts
For Daily Alerts
Just In
கால் வலி-குழந்தையை கொன்று தாய் தற்கொலை
மதுரை: நோய் குணமாகாததால் குழந்தையை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அருகே உள்ள வஞ்சி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா. மகள் தக்ஷனா.
சித்தராவிற்கு அடிக்கடி கால் வலி ஏற்படுமாம். இதனால் பரிசோதனைக்கா டாக்டரிடம் சென்றுள்ளார். அப்போது எலும்பு தொடர்பான பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்தார் சித்ரா. இருப்பினும் கால் வலி குணமாகவில்லை.
இதனால் விரக்தி அடைந்த சித்ரா தனது குழந்தையை அருகில் உள்ள கிணற்றில் வீசி கொலை செய்ததுடன் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிதோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Story first published: Thursday, August 28, 2008, 15:34 [IST]