வைகை அணை நிரம்புகிறது-வெள்ள அபாய எச்சரிக்கை
{image-Vaigai Dam-250_29082008.jpg tamil.oneindia.com}மதுரை: மதுரை உள்ளிட்ட ஐந்து தென் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நீராதாரமாகவும் விளங்கும் வைகை அணை முழுக் கொள்ளளவை நெருங்கி விட்டது. இதையடுத்து முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயஆதாராமாக வைகை அணை விளங்குகிறது.
கடந்த 10 நாட்களாக வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஆண்டிப்பட்டி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.
மொத்தம் 71 அடியைக் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அணைக்கு விநாடிக்கு 2000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 41 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்தவுடன் 2வது வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். 69 அடியை எட்டியவுடன் 3வது அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணை திறக்கப்படும்.
எனவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications