நின்று கொண்டிருந்த லாரி மீது லாரி மோதி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே இன்று காலை லாரி மீது லாரி மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில், கீரநல்லூர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.
ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. சுங்குவார்சத்திரம் அருகே கீரநல்லூர் என்ற இடத்தில் லாரி வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மணல் லாரி மீது மோதியது.
இதில் காய்கறி லாரியின் டிரைவர், கிளீனர் மற்றும் 2 லோடுமேன்கள் ஆகியோர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications