தீக்குளிக்கப் போவதாக திமுக பிரமுகர் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மருத்துவ படிப்பில் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளிக்கப் போவதாக திமுக பிரமுகர் மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வரி புகார் பிரிவுக்கு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கொட்டாரகுறிச்சி திமுக கிளை செயலாளர் சண்முகவேலு என்பவரது பெயரில் கடிதம் ஒன்று வந்தது.
அந்த புகார் கடிதத்தில், மருத்துவ படிப்பில் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும். மருந்துகளின் பெயரையும் தமிழிலேயே எழுத வேண்டும். இதை வலியுறுத்தி எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக் குனர் அலுவலகம் முன் இன்று தீக்குளிப்பேன் என்று எழுதப்பட்டு இருந்தது.
இதை அடுத்து எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் முன் இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு யாரும் தீக்குளிக்க முயற்சி செய்யவில்லை. எனினும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications