போலி பாஸ்போர்ட்-சென்னையில் வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த நாசர் மொய்தீன் மகன் உமர் மொய்தீன் (32). இவர் நேற்றிரவு சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்தனர்.
அப்போது உமர்மொய்தீன் பாஸ்போர்ட்டில் வைக்கப்பட்டிருந்த முத்திரை போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பாஸ்போர்ட் மோசடி செய்ததாக உமர்மொய்தீனை விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார் உமர் மொய்தீனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications