நடிகர் ராஜசேகர் சூட்கேஸில் துப்பாக்கி: விமான பயணத்திற்கு அனுமதி மறுப்பு

ஹைதராபாத் விமான நிலையத்திற்கு ராஜசேகர் வந்தார். சென்னை விமானத்தில் அவர் பயணிப்பதாக இருந்தது. இந்த நிலையில் அவர் வைத்திருந்த சூட்கேஸை மத்தியதொழிலக பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டனர். அப்போது, சூட்கேஸில் 6 குண்டுகள் நிரப்பப்பட்ட நிலையில் கைத் துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் விமான பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ராஜசேகரையும், துப்பாக்கியையும் ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில் தொழிலக பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தனர். தனது சூட்கேஸில் தவறுதலாக துப்பாக்கி வந்து விட்டதாக ராஜேசகர் தெரிவித்தார். மேலும் கைத் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தையும் அவர் காட்டினார்.
இதைடுத்து துப்பாக்கி ராஜசேகரிடம் திருப்பி கொடுக்கப்பட்டது. உரிய உரிமம் இருந்ததால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் காரணமாக ராஜசேகர் தனது விமான பயணத்தை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications