ரூ.1க்கு கிலோ அரிசி: கருணாநிதிக்கு அரசியல் தலவர்கள் பாராட்டு

காவியம் படைத்த கருணாநிதி - வீரமணி:
திராவிட கழகத் தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் இந்த அறிவிப்பு ஏழை எளிய அடித்தட்டு மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் என்பது உறுதி.
நான் படைக்கும் காவியங்கள், படைப்புகளில் முக்கியமானவை, ஏழை எளியவர்களின் கண்ணீரை துடைக்கும் செயல்கள்தான் என்று சில தினங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி கூறினார். இப்படி ஒரு காவியம் படைத்ததற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
போற்றுதலுக்குரியது - சுதர்சனம்:
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் இந்த அறிவிப்பினால் தமிழகத்தில் 1 கோடியே 80 லட்சம் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஏற்படும் ரூ.400 கோடி இழப்பை பொருட்படுத்தாமல் ஏழைகளின் நலன் கருதி எடுத்துள்ள இந்த முடிவு போற்றுதலுக்குரியது.
முதல்வர் கருணாநிதிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அண்ணாவின் உண்மை தம்பி - திருமாவளவன்:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், இந்த அறிவிப்பு திமுக அரசுக்கு மேலும் பெருமையை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்திய அண்ணாவின் கனவை நனவாக்கும் வகையில் கிலோ அரிசி ரூ.1 என்ற திட்டத்தை நடைமுறைபடுத்தி இருப்பதன் மூலம் கருணாநிதி, அண்ணாவின் உண்மை தம்பி என்பதை காட்டுகிறது.
கடந்த 2006ல் ரூ.2க்கு கிலோ அரிசி திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார். தற்போதைய இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இரட்டிப்பு பயன் அடைவார்கள். இந்த அறிவிப்புக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications