விலைவாசி..தேர்தலில் எதிரோலிக்கும்: திருமா

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: விலைவாசி உயர்வு வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவி்த்தார்.

நெல்லை மாவட்டம், நரிப்பாறையைச் சேர்ந்தவர் துரைசிங்கம். வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட துரைசிங்கத்தை வடசேரி போலீசார் கொலை செய்துவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

துரைசிங்கம் கொலையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:

ஒரிஸ்ஸாவில் கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் வன்னையாக கண்டிக்கதக்கது. வன்முறையாளர்களை அடக்கி சுமூக நிலை ஏற்படுத்த அங்கு துணை ராணுவத்தை மத்திய அரசு அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை. ரூ.1க்கு அரிசி திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தொடர் மின் வெட்டையும், விலைவாசி உயர்வையும் மக்கள் மறந்து விட மாட்டார்கள் என்றார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், டீசல் தட்டுபாடு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனைகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இடதுசாரி கட்சிகள் அகில இந்திய நிலையையே பின்பற்றி வருகின்றன.

பாமக போன்றவை திமுக கூட்டணியில் தொடர வேண்டும். மின்வெட்டு, டீசல் தட்டுபாடால் மக்கள் கடு்மையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதை இப்படியே விட்டுவிடாமல் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+