இந்தியாவில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்
டெல்லி: இந்தியாவில் நேற்றிரவு ரம்ஜான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் நோன்பு தொடங்கியது.
இதுகுறித்து டெல்லி பதேபூர் மசூதி ஷாஹி இமாம் மெளலானா முப்தி முகரம் கூறுகையில், ரம்ஜான் புதிய பிறை நேற்று தென்பட்டது. இதையடுத்து இன்று காலை முதல் முஸ்லீம்கள் நோன்பை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்திலும் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி முகம்மது சலாகுதீன் அயூப் அறிவித்துள்ளார்.
ரம்ஜான் மகத்துவம்:
இஸ்லாமிய மார்க்கப்படி பிறை கண்டு நோன்பு பிடிக்க வேண்டும். இறுதியில் பிறை கண்டு நோன்பை முடிக்க வேண்டும்.
இஸ்லாமிய சமுதாயத்தில் மிகவும் புனிதமாக கருதப்படுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் பராபட்சம் இன்றி உண்ணா நோன்பு இருப்பது வழக்கம். இதில் 29வது நாளிலோ அல்லது 30வது நாளிலோ பிறை கண்டுவிட்டால் மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ரமலான் மாதத்தில்தான் இறைவனின் இல்லக் கதவு 30 நாட்களும் திறந்திருப்பதாக இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பப்படுகிறது.
ரமலான் நோன்பு சமயத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சியை மக்கள் மத வேறுபாடின்றி பெற்றுச் செல்வது வழக்கம்.












Click it and Unblock the Notifications