வாடகை-கடைகளை சீல் வைத்த மதுரை கமிஷ்னர்
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மாநகராட்சி கட்டிடத்தில் கடை வாடகை தராமல் கால தாமதம் செய்து வந்த கடைகளை மாநகராட்சி கமிஷனர் அதிரடியாக பூட்டி சீல் வைத்தார்.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 150 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை.
வாடகை செலுத்தக் கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
இந் நிலையில் மதுரை மாநகராட்சி கமிஷனர் தினகரன், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் படை சூழ மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு சென்றனர்.
அங்கு வாடகை பாக்கி வைத்திருந்த சுமார் 20 கடைகளை அதிரடியாக பூட்டி சீல் வைத்தார்.
இதனால், பூட்டி சீல் வைக்கப்பட்ட கடைகளை சார்ந்தவர்கள் உடனடியாக தங்களது வாடகை பாக்கியான ரூ. 6. லட்சத்தை மாநகராட்சிக்கு செலுத்தினர். இதையடுத்து கடைகளைத் திறந்துவிட்டார் கமிஷ்னர்.












Click it and Unblock the Notifications