'அணு': பாஜக-இடதுசாரிகள் போர்க்கொடி
டெல்லி: இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் மன்மோகன் சிங்கின் முயற்சிகள் அம்பலமாகி விட்டதாக பாஜக மற்றும் இடதுசாரிகள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பெர்மன் வெளியிட்டுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், மன்மோகன் சிங் அரசின் மோசடித்தனம் அம்பலமாகி விட்டது. இனியும் இந்த அரசு ஒரு நாள் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. அதற்கான தகுதியை இழந்து விட்டது.
அணு ஆயுத சோதனைக்கு ஒரு தடையும் இல்ைல என்று பிரதமர் தெரிவித்து வந்தார். ஆனால் புஷ் அரசு அதை மறுத்து கடிதம் வெளியிட்டிருப்பது மன்மோகன் சிங் ஒரு பொய்யர் என்பதை நிரூபித்து விட்டது.
இந்தக் கடிதம் எழுதப்பட்ட 8 மாதங்களாகி விட்டன. இதுகுறித்து பிரதமருக்கும் தெரியும். இருப்பினும் லோக்சபாவில் இந்தக் கடிதத்திற்கு முற்றிலும் மாறாக அவர் பேசியது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
இடதுசாரிகள்:
இது குறித்து இடதுசாரி கட்சித் தலைவர்கள் கூறுகையில், அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் எடுத்த நிலையை சிலர் விமர்சித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது.
ஹைட் சட்டம் இதில் வரவே இல்லை என்று இந்திய அரசு கூறி வந்தது. ஆனால் அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக இப்போது அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணு ஆயுத சோதனை நடத்த தடை இல்லை என்று பிரதமர் கூறினார். ஆனால் நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் ரத்தாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் முயற்சியைக் கண்டித்து நாங்கள் குரல் கொடுத்தது சரியானதுதான் என்பதை நிரூபிப்பதாக இந்தக் கடிதம் அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
'கடிதம் வெளியானது இந்தியாவுக்கு நல்லதே':
வியன்னாவில் இன்று என்.எஸ்.ஜி கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், அமெரிக்க அரசு எழுதிய கடிதம் வெளியாகியுள்ள விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்தக் கடிதம் என்.எஸ்.ஜி. கூட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமான நிலையையே உருவாக்கும் என சர்வதேச விவகார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா அணு ஆயுத சோதனை நடத்துவதை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என இந்தக் கடிதம் கூறுவதால், அது அணு ஆயுத பரவலை எதிர்க்கும் என்எஸ்ஜி நாடுகள் இந்தியாவுக்கு எதிரான நிலையை எடுப்பதை தவிர்க்க உதவும் என்கின்றனர்.
அணு ஒப்பந்தம் குறித்த ஆய்வு கட்டுரை:
புத்தர் சிரித்தாலும் சிரித்தார்...












Click it and Unblock the Notifications