'என்கெளன்டர்': சிபிஐ விசாரணை கோரி வழக்கு- குஜராத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் போலீஸார் 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடத்திய போலி என்கெளன்டர்கள் குறித்து சிபிஐ மூலம் விரிவான விசாரணை நடத்த கோரி பிரபல திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஜாவேத் அக்தர் தாக்கல் செய்திருந்த மனுவில், குஜராத்தில் இந்த காலகட்டத்தில் 21 போலி என்கெளன்டர்கள் நடந்துள்ளதாக மாநில முதல்வர் நரேந்திர மோடியே குஜராத் சட்டசபையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே இந்த போலி என்கெளன்டர்கள் குறித்து சிபிஐ மூலம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் சமீர் கான் என்பவரையும் குஜராத் போலீஸார் போலி என்கெளன்டர் மூலம் கொன்றுள்ளனர். அதுகுறித்தும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, அப்தாப் ஆலம் ஆகியோர் முன்னிைலயில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை நவம்பர் 2வது வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+