கொல்லம்: விநாயகர் கோவிலில் வெடிவிபத்து-2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொல்லம்: கேரள மாநிலம் கொட்டாரக்காரா என்ற இடத்தில் உள்ள மகா கணபதி கோவிலில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது கோவிலுக்கு வெளியே சிலர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசுப் பொட்டலத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் சரமாரியாக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் முரளீதரன், கோபி ஆகிய இருவர் தீக்காயமுற்று உயரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications