வைகை அணை நிரம்புகிறது-வெள்ள அபாய எச்சரிக்கை
{image-Vaigai Dam (1)250_04092008.jpg tamil.oneindia.com}ஆண்டிப்பட்டி: வைகை அணை தனது முழுக் கொள்ளவை எட்டி வருவதால் அணை அடுத்த சில தினங்களில் எந்த நேரமும் திறக்கப்படவுள்ளது. இதனால் வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசனம், குடிநீர் வழங்கும் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126 அடியை நேற்று எட்டிவிட்டது. மஞ்சளாறு அணையும் நிரம்பி வருகிறது.
வருசநாடு, வெள்ளி மலை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அதே போல 71 அடி உயரம் கொண்ட வைகை அணையிலும் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 68.8 அடியாக உள்ளது.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரும் வந்து கொண்டிருப்பதால் அணைக்கு வினாடிக்கு 1,559 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது.
நீர் மட்டம் 68 அடியை நீர்மட்டம் எட்டியவுடன் 2வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந் நிலையில் அணை இன்றே நிரம்பிவிடும் எனத் தெரியவதால் இன்று மாலையே இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் எனத் தெரிகிறது. இந்த எச்சரிக்கை விடப்பட்டால் எந்த நேரத்திலும் அணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படும்.
இதனால் வைகை நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதோடு ஒலி பெருக்கிகள் மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.
வைகை அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பொன்விழா கொண்டாட்டத்துக்கு அணை தயாராகி வருகிறது. இந்த நேரத்தில் அணை தனது முழு அளவை எட்டியுள்ளது தென் மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications